Sunday 19th of May 2024 12:26:55 PM GMT

LANGUAGE - TAMIL
.
உடன் அமுலாகும் வகையில் மேலும் சில இடங்கள் முடக்கப்பட்டன: சில இடங்கள் நாளை விடுவிப்பு!

உடன் அமுலாகும் வகையில் மேலும் சில இடங்கள் முடக்கப்பட்டன: சில இடங்கள் நாளை விடுவிப்பு!


கொரோனாத் தொற்று உறுதியான நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து சில இடங்களில் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

எஹலியகொட பிரதேச செயலகப் பிாிவின் மின்னான, விலேகொட, யக்குதாகொட, அஸ்ககுல-வடக்கு, போபத்த ஆகிய கிராம சேவகர் பிாிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

இதேபோல் கொடகவெல பிரதேச செயலகப் பிாிவின் ரக்வான நகரம், ரக்வான- வடக்கு, ரக்வான - தெற்கு, மஸ்ஸிபுல, கொட்டல ஆகிய கிராம சேவகர் பிாிவுகளும் உனடடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தொிவித்துள்ளார்.

இதேவேளை நாளை (டிச-28) காலை 5 மணியுடன் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை ஆகிய காவல் துறை அதிகார பிரதேசங்கள், கொம்பனித் தெருவில் வேகந்த மற்றும் ஹுனுபிட்டிய கிராமசேவகர் பிாிவு, வெள்ளவத்தை-மயூரா வீதி, பொரள்ளை-ஹல்கஹவத்த மற்றும் காளிபுள்ளவத்த, வெள்ளம்பிட்டி லக்சந்த செவன வீடமைப்புத் திட்டம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

இதற்கு மேலாக வாழைத்தோட்டம்-அளுத்கடை மேற்கு மற்றும் அளுத்கடை கிழக்கு கிராம சேவகர் பிாிவுகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் தொிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE